![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 182
![]() இதழ் 182 [ மார்ச் 2025 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் み吉野の 山の秋風 さ夜ふけて ふるさと寒く 衣うつなり கனா எழுத்துருக்களில் みよしのの やまのあきかぜ さよふけて ふるさとさむく ころもうつなり ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் மசாட்சுனே காலம்: கி.பி. 1170-1221. இத்தொடரின் 83வது பாடலை (துயரறுத்தலே துயரமோ?) இயற்றிய புலவர் தொஷினாரியின் இளைய மகன். இத்தொடரைத் தொகுத்த சதாய்யேவின் தம்பி. விளையாட்டிலும் இலக்கியத்திலும் ஒருங்கே திறமை பெற்றிருந்தார். ஜப்பானில் புகழ்பெற்ற கெமாரி எனப்படும் கால்பந்து போன்ற விளையாட்டை உருவாக்கியவர் இவரே. கமாகுராவில் வாழ்ந்துவந்த இவரைப் பேரரசர் கோதொபா கி.பி.1198ல் தலைநகர் கியோத்தோவுக்கு அழைத்து அரசவைப் புலவராக ஆக்கினார். பின்னர் ஷின்கொக்கின்ஷூ தொகுப்பைத் தொகுக்கும் பணியையும் வழங்கினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகத் தனிப்பாடல் திரட்டு ஒன்றும் 134 பிற பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பிற்காலக் கவிஞர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருக்கிறார். பாடுபொருள்: முன்னாள் தலைநகரின் வெறுமை பாடலின் பொருள்: நரா மாகாணத்தின் யொஷினோ மலையின்மீது பனி படரத் தொடங்கி இருக்கிறது. ஒருகாலத்தில் எவ்வளவு பரபரப்பாக இருந்தது இந்நகரம்? இப்போது இரவு செல்லச்செல்ல கினுதாவால் அடிக்கும் ஓசை மட்டுமே கேட்கிறது. தலைநகரம் கியோத்தோவுக்கு மாறிய பிறகு நரா நகருக்கு ஏற்பட்ட வெறுமையை விளக்கும் ஓர் எளிய பாடல். இப்பாடல் அக்காலத்தில் துணி நெய்யும்போது பயன்படுத்திய ஒரு செயல்பாட்டைப் பதிவு செய்கிறது. தறியில் துணியை நெய்து முடித்தபின் அதைத் துவைத்து ஒரு கல்லின்மேல் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின் கல்லின் மேற்பரப்புக்கு ஏற்பத் துணி சீரற்ற வடிவத்தில் மேடுபள்ளமாக இருக்கும். எனவே, கினுதா என்றொரு கருவியைப் பயன்படுத்தி அதைத் தட்டித்தட்டிச் சீராக்குவார்கள். பின்னர் அத்துணி துவைத்த மற்றும் காயவைத்த சுவடே தெரியாமல் அப்போது நெய்த புதுத்துணிபோல் காட்சியளிக்கும். தறி நெசவுக்குப் பெயர்போன யொஷினோ மலையடிவாரத்தில் நெசவாளர்கள் துணியைத் தட்டும் ஓசையானது அரவமற்ற முன்னாள் தலைநகரில் துல்லியமாகக் கேட்கிறது என்கிறார் புலவர். ![]() கினுதா வெண்பா: அன்றொரு நாளது மக்களும் கூடியே நின்றிடப் போதிலா ஓட்டமும் - என்றே இருந்தது மாறியே வேறிடம் சென்றிடச் சென்றிட ஆகும் நலிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |