![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 173
![]() இதழ் 173 [ நவம்பர் 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 54: இன்றே இனிய நினைவுடன் மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 忘れじの 行く末までは かたければ 今日をかぎりの 命ともがな கனா எழுத்துருக்களில் わすれじの ゆくすゑまでは かたければ けふをかぎりの いのちともがな ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் தகாக்கோ காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி. 996. ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த மிச்சிதகாவின் மனைவி இவர். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள். பின்னாளில் ஆளுநராக இருந்த தகாய்யே, பேரரசர் இச்சிஜோவை மணந்த தெய்ஷி, ஆளுநர் கொரேச்சிகா ஆகியோர். இலக்கியக் குறிப்புகளில் இவர் கொரேச்சிகாவின் தாயாகவே அறியப்படுகிறார். ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் காலத்தால் அழியாத 36 பெண்பாற்கவிஞர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 5 பாடல்கள் உள்ளன. பாடுபொருள்: காதலன் பிரிந்து செல்வதைத் தாங்காத பெண்மனம் பாடலின் பொருள்: என்னை மறக்கவே மாட்டேன் என்று உறுதியளித்தாய். ஆனால் ஆண்கள் மனது மாறக்கூடியது என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனவே நீ என்னை நேசித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியிலேயே இறந்து போக விரும்புகிறேன். ஜப்பானிய இலக்கியங்களில் இன்பியல் முடிவுகள் மிகவும் குறைவு. இடையில் காதலர்கள் ஒன்று சேர்ந்தாலும் விரைவில் பிரிந்து விடுவார்கள். எனவே குறுகியகாலக் காதல் வாழ்க்கையை எல்லாக் கதாபாத்திரங்களும் பெரும்பாலும் எதிர்பார்த்தே இருக்கும். இந்தப்பாடல் ஒருபடி மேலேபோய்ப் பிரிவு உறுதியாக நிகழும் என உரைக்கிறது. ஆனால் அதேநேரம் கைகூடிய காதலையும் கொண்டாடத் தவறவில்லை. ஜப்பானிய அரசகுடும்பத்துத் திருமணங்களில் மனைவி வீட்டுக்குத் தினமும் கணவன் வந்து செல்வது வழக்கம் என்று பார்த்தோமல்லவா? மனைவியை விட்டுப் பிரியவேண்டும் என்று முடிவெடுத்த கணவன் இரு வருகைகளுக்கு இடையிலான இடைவெளியைச் சிறிது சிறிதாக அதிகரித்து இறுதியில் வராமலே இருந்து விடுவார். சென்ற பாடலில் பார்த்ததைப்போல் மணமுறிவு ஏற்பட்டுவிடும். கணவர் வரும் நாட்களிலெல்லாம் ஏராளமான பொன்னும் பொருளும் மனைவியின் வீட்டுக்கு வரும். மணமுறிவு ஏற்பட்ட பிறகு வறுமை சூழும் நிலையும் ஏற்படுவதுண்டு. அதனால் பெண்கள் மறுமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இதேபோன்றதொரு பாடல் இவரது சமகாலப் புலவரான அகாஜொமே என்பவராலும் இயற்றப்பட்டு கொஷூய்ஷூ தொகுப்பில் உள்ளது. இக்காலத்துத் படைப்புகளில் அதீத மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு வருகிறதே 'இப்பவே செத்துடலாம்னு தோணுது' என்பது போல. வெண்பா: உறுதியாய் என்றும் மறவேன் எனினும் மறுவரற் போதில் கலங்கும் - இறுதியாய் இந்நிலை காணும் திறனிலி பேதைக்கு இப்போதே வேண்டும் இறப்பு மறுவரல் - மனம் மாறுதல் (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |