![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 140
![]() இதழ் 140 [ ஃபிப்ரவரி 2018 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
நம் பழந்தமிழர்கள் பலவகையான விளையாட்டுக் கலைகள் பயில்பவர்களாக வாழ்ந்துள்ளனர். வீரவிளையாட்டுகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள் என இருவகையாகப் பகுத்து ஆய்ந்தாலும், நீர், நிலம், திணை, விலங்கு, புள்ளினம் என இவை சார்ந்தும் விளையாட்டுக்கள் அமைத்துள்ளனர். சில விளையாட்டுகள் நிலமரபுகள் சார்ந்து குறிப்பிட்ட திணைக்கே உரியதாய் வழக்கில் இருந்துள்ளது. வட்டாடல் என்னும் விளையாட்டு சங்ககாலத்தில் அவர்களின் வாழ்வியல் வழக்கில் இருந்துள்ளது. இவ்விளையாட்டைப் பற்றிய குறிப்பு நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
நற்றிணை நவிலும் அவ்விளையாட்டுச் செய்திக் குறிப்பு இதோ: "பொரியாரை வேம்பின் புள்ளிநீழல் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டாடும் வில்லேருழவர் வெம்முனைச் சீறூர்..." நெல்லிக்காய்களை உருட்டி அரங்கம் அமைத்து இழைத்து இழைத்து விளையாடியுள்ளனர். வேப்ப மரநிழலில், கல்லாத சிறுவர்கள் வட்டரங்கு இழைத்து நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு ஆடிய செய்தியை இப்பாடல் இயம்புகின்றது. இதுபோன்றே, பல விளையாட்டுக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. நம் முன்னோர்கள் செறிவான அறிவியல் நோக்கோடு விளையாட்டுப் பயின்று வாழ்ந்துள்ளனர் என்பது சங்கப் பாடல் காட்டும் சொற்சித்திரங்கள் வழி தேற்றம். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |