http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 179

இதழ் 179
[ ஜூலை 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்பெரும் விழா அழைப்பிதழ்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகளில் சமுதாயம் - 1
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
பெருவேளூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 78 (இடம்பெயரும் புல்லினங்காள்!!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 77 (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 76 (துள்ளிவரும் வெள்ளலையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 75 (பனித்துளியன்ன உறுதிமொழி)
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 4
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்
இதழ் எண். 179 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 78 (இடம்பெயரும் புல்லினங்காள்!!)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
淡路島
かよふ千鳥の
鳴く声に
幾夜ねざめぬ
須磨の関守

கனா எழுத்துருக்களில்
あはぢしま
かよふちどりの
なくこゑに
いくよねざめぬ
すまのせきもり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: அரசவைப் புலவர் கனேமசா

காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி. 1112ம் ஆண்டு.

கி.பி. 12ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜப்பானை ஆண்ட பேரரசர் ஹொரிகவாவின் அரசவையில் புலவராக இருந்ததும் பல்வேறு போட்டிகளில் பாடல் புனைந்து பரிசுகள் வென்றதும் தவிர இவரைப்பற்றி வேறெதுவும் குறிப்புகள் காணப்படவில்லை. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 7 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: பறவைக் கூட்டத்தின் அழகு

பாடலின் பொருள்: இரைதேடிக் கிளம்பும் பறவைகளின் ஒலியைக்கேட்டுத் துயிலெழும் சுமா சுங்கச்சாவடியின் காவலர் பகலில் கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் கடற்பறவைகள் அவாஜி நீரிணைப்பைக் கடப்பது இந்நள்ளிரவிலும் நிகழ்வதால் எத்தனைமுறை விழித்துப் பார்க்கிறாரோ!!

தலைநகர் கியோத்தோவுக்குத் தென்மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள அவாஜி எனும் தீவின் அழகையும் அது அமைந்திருக்கும் கான்சாய் விரிகுடாவின் அழகையும் அவ்வளைகுடாவின் ஊடே கடற்பறவைகள் பறந்து கடக்கும் அழகையும் கூறும் எளிமையான இப்பாடல் ஜப்பானின் புவியியல் அமைப்பைப் பதிவு செய்வதுடன் கென்ஜியின் கதை புதினத்தில் வரும் சுமா அத்தியாயத்தையும் தொடர்புபடுத்துகிறது.

புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன. இன்றளவும் ஜப்பானியர்கள் ஒவ்வொரு தலைமுறையும் படித்து இன்புறும் புதினமாகக் கென்ஜியின் கதை திகழ்கிறது.



அவாஜி தீவின் வரைபடம்

வெண்பா:

திரைகடல் தாண்டல் இயல்பெனக் கொண்டு
தரைதொட லின்றிப் பறந்து - இரைக்கெனக்
கூட்டினை நீங்கிடும் புள்ளின் ஒலியினால்
நீடுதுயில் நீக்கும் விடிவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.