http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 179

இதழ் 179
[ ஜூலை 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

முப்பெரும் விழா அழைப்பிதழ்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகளில் சமுதாயம் - 1
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் கல்வெட்டுகள் - 1
பெருவேளூர் மாடக்கோயில்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 78 (இடம்பெயரும் புல்லினங்காள்!!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 77 (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 76 (துள்ளிவரும் வெள்ளலையே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 75 (பனித்துளியன்ன உறுதிமொழி)
சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 4
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர்
இதழ் எண். 179 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 77 (பிரிவு என்பதே உறவுக்காகத்தான்!)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
瀬をはやみ
岩にせかるる
滝川の
われても末に
あはむとぞ思ふ

கனா எழுத்துருக்களில்
せをはやみ
いはにせかるる
たきがはの
われてもすゑに
あはむとぞおもふ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் சுதொகு

காலம்: கி.பி 1119-1164.

19 ஆண்டுகள் ஜப்பானை ஆண்ட பேரரசர் சுதொகு கி.பி. 1142ல் அரசபதவியைத் துறக்க நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார். அப்போது அரசராக முடிசூடிய கொனொயே இறக்கும்வரை தன் மகன் அரியணை ஏறும் காட்சியைக் காணக் காத்திருந்தார். அப்போது கி.பி. 1151ல் இப்பாடலை இயற்றினார்.

முந்தைய பாடலில் பார்த்த ஹோகென் கலவரத்தின் முடிவில் தோல்வியடைந்த பேரரசர் சுதொக்கு சனுக்கி மாகாணத்துக்குக் கடத்தப்படுகிறார். அங்கு அவர் தன்னை வென்ற பேரரசர் கோஷிராகவாவைச் சபித்தவாறும் தலைமுடியையும் தாடியையும் நகங்களையும் நீளமாக வளர்த்துக் கோர உருவத்தைக் கொண்டும் மீதமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் எழுதப்பட்ட கொன் ஜாகுவின் கதை எனும் புதினத்தில் கதாநாயகன் சனுக்கி மாகாணத்துக்குச் செல்லும்போது அங்கு சாய்க்யோ என்ற கோரமான பேயைக் காண்பதாக வருகிறது. அப்பேய் இவராக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

கவிதை புனைவதில் வல்லவரான இவர் இத்தொடரின் 79வது பாடலை இயற்றிய புலவர் அகிசுகேவைப் பல்வேறு தனிப்பாடல்களைத் தொகுத்து ஷிக்காஷு எனும் தொகுப்பை உருவாக்கப் பணித்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 78 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: பிரிவுக்கு ஆறுதல் கூறுதல்

பாடலின் பொருள்: நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.

காதலினாலோ போரினாலோ வேறு ஏதாவது சிக்கலாலோ பிரிந்த இருவர் மீண்டும் ஒன்று சேர்வோம் என்ற நம்பிக்கையைக் கொள்ளவைக்கும் பாடல். இப்பாடலின் ஆசிரியர் இந்த மூன்று காட்சிகளில் எதை மனதில் வைத்து எழுதினார் என்று தெரியவில்லை. இவர் இக்கவிதையை இயற்றிய காலத்தில் ஜப்பானில் போர்கள் ஏதும் நடைபெறவில்லை. எனவே, கவிதை புனைவதில் வல்லவர் என்பதால் காதலை மையமாக வைத்து எழுதியிருக்கலாம் என்றும் தன் குடும்பத்தை விட்டு அரசபதவி போய்விட்டதால் மீண்டும் தன் குடும்பவாரிசு அரியணை ஏறுவதை மீண்டும் இணைவதாக உருவகித்திருப்பதாகவும் உரையாசிரியர்கள் இருவேறு விதமாகப் பொருள் கொள்கிறார்கள்.

வெண்பா:

நதியிடை தோன்றிடும் பாறையைத் தாண்டிச்
சிதிலமும் இன்றியே சேர்தல் - விதியேபோல்
நும்மைப் பிரிந்திட்ட நானுமே மீண்டுமுமைச்
சேர்ந்திடவே நேர்ந்த பிரிவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.