![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 138
![]() இதழ் 138 [ அக்டோபர் 2017 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
"வசந்த கால நதிகளிலே .... வைரமணி நீரலைகள்"
(வசந்தகாலப் பொன்னியில் மின்னும் வைரமணி நீரலைகள்)
ஆம் ! மேலே காண்பிக்கப்பட்டுள்ள காட்சியைக் கண்ணுற்றபொழுது நம் நினைவலைகளில் தவிர்க்கமுடியாமல் வந்து போன, கண்ணதாசன் இயற்றி, எம்.எஸ்.வி இசையமைத்து, ஜெயச்சந்திரன், வாணிஜெயராம், எம்.எஸ்.வி, ஆகியோர் பாடி பாலச்சந்தர் இயக்கத்தில், ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த "மூன்று முடிச்சு" திரைப்படத்தில் இடம்பெற்ற அந்தப்பாடல் இதோ! வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள் இப்பாடல் முழுவதும் அந்தாதியில் இயற்றப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித்தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது 'முடிவு' என்றும் ஆதி என்பது 'முதல்' என்று பொருள்படும். முடிவை முதலாகப் பெற்று அமைவது அந்தாதி ஆகும். ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும். அந்தாதி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு செய்யுட்களுக்கும் இடையே காணப்படுவது. இரண்டு அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர். இப்பொழுது மீண்டும் இப்பாடல் வரிகளை கவனியுங்கள்! "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் முதல் அடியின் ஈற்றுச்சொல் இரண்டாம் அடியின் முதற்சொல்லாகப் பயின்று வருவதால் இப்பாடல் அந்தாதியாகும்! இப்பாடலில் அந்தாதி மட்டுமன்று. சொல்பொருள் பின்வருநிலையணியும் உவமையணியும் பயின்று பாடலின் அழகுக்கு மெருகூட்டுகிறது! இப்பாடலில் நீரலைகள், நினைவலைகள், கனவலைகள், மலர்க்கணைகள், பஞ்சணைகள், தலையணைகள், புதுக்கலைகள், மணவினைகள் மற்றும் விதிவகைகள் என்ற சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கைகளில் இடம்பெற்று அதேபொருளும் பயின்று இடம்பெற்றமையால் இப்பாடலில் சொல்பொருள் பின்வருநிலையணி இடம்பெறுவதை அறியலாம். இப்பாடலில் உவமையணியும் இடம்பெற்று இதன் அழகுக்கு மேலும் அழகூட்டுகிறது என்றால் அக்கூற்று சற்றும் மிகையாகாது! உவமையணி: ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள ஒப்புமையை எடுத்துக்கூறுவது உவமையணி ஆகும். பலபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையும் காட்டப்படலாம். பொருள்களுக்கு இடையே உள்ள பண்பு ஒப்புமை, தொழில் ஒப்புமை, பயன் ஒப்புமை ஆகியவை காரணமாக உவமை அமையும். ஆகவே, அடிப்படையில் பண்பு உவமை, தொழில் உவமை, பயன் உவமை என உவமை மூன்று வகைப்படும். உவமை அணியின் இலக்கணத்தைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது. பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின் பொதுவாக உவமையணியில் நான்கு உறுப்புகள் இருப்பதைக்காணலாம். அவை, ஆகியன. உவமானம், உவமேயம் புலவர் விளக்கிக் கூறக் கருதும் பொருள், 'பொருள்'அல்லது 'உவமேயம்' எனப்படும். அப்பொருளை விளக்கவோ அழகுபடுத்தவோ அவர் இயைத்துக் கூறும் மற்றொரு பொருள் 'உவமை' அல்லது 'உவமானம்' எனப்படும். ஒத்த பண்பு உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பைப் புலவர் சுட்டிக் காட்டியிருப்பார். இதுவே 'ஒத்த பண்பு' எனப்படும். உவமை உருபு உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும். "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் கவிஞரின் மேதமை எடுத்த எடுப்பிலேயே உச்சத்திற்கு செல்கிறது! நதிகளில் செல்லும் நீரலைகள் என்றே அவர் குறிப்பிட்டிருக்கலாம்! எப்பொழுதுமே சிறந்ததை எடுத்துக்காட்டி விளக்குவது கவிஞர் தொழில். நதிகள் வருடம் முழுவதும் நதிகள்தான்! ஆனால் அவை வசந்தகாலத்தில் தான் செழுமையுடன் ஆற்றொழுக்காய் அலையலையாய் நடைபயிலும்! அதனைத் தலைவன் மற்றும் தலைவியின் நெஞ்சங்களில் தோன்றும் எண்ணங்களுடன் ஒப்பிட்டு "நினைவலைகள்" என்று குறிப்பிட்டு நீரலைகளுக்கும் நினைவலைகளுக்கும் பொருந்தும் ஒத்தபண்பான "அலைதல்" என்பதைச் சுட்டி இப்பாடலை மேலும்மேலும் இதே தொனியில் செலுத்துகிறார். அதே போல் நீரலைகள் எவ்வாறு உள்ளன என்பதை "வைரமணி" போல் உள்ளதாக உவமைப்படுத்துகிறார்! (படம் பார்க்க) இவ்வரிகளில் உவமஉருபு பயின்று வராவிட்டாலும், ஒத்த பண்பும், உவமையும், உவமேயமும் இடம்பெற்று உவமையணி பயின்று இப்பாடல் காலம் கடந்து நம் "நினைவலை"களில் வாசம் செய்யும் வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ்! |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |