![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 151
![]() இதழ் 151 [ பிப்ரவரி 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அங்கையு ளனலும் வைத்தார் திருப்பழனம் வீணாதரர் மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில் வீணையையும் வைத்தார்! அறுவகைச் சமயங்களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் என்று திருமறைகாட்டு இறைவனை அப்பர் புகழ்கின்றார். கி.பி. 9 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் காலத்தவரான சேரமான் பெருமாள் தனது ஞான உலாவில், அனைத்து தெய்வங்களும் தேவர்களும் சிவபெருமானைக் காண ஊர்வலமாக சென்றபொது, அங்கு வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளின் பட்டியலை தருகின்றார். சல்லரித்தாளம் தகுணிதந் தத்தளகம் திருவிசலூர் வீணாதரர் கொடும்பாளூர் மூவர் கோயில் வீணாதரர் திருமால், பிரம்மா, முருகன், விநாயகர் ,சப்தமாதர்கள், துர்க்கை, வித்தியாதரர், இயக்கர், கின்னரர், கிம்புருடர் ஆகியோர் உள்பட அனைவரும் சிவபெருமானை காண ஊர்வலமாய் வர, உடன் இசைக்கும் இசைக்கருவிகளாக பின்வரும் இசைக் கருவிகளை சேரமான் பெருமாள் குறிப்படுகிறார். சல்லரி, தாளம் ,தகுணிதம் ,தத்தளகம் ,கல்லவடம், மொந்தை, தட்டழி, சங்கம் , சலஞ்சலம், தண்ணுமை, பேரி, கரதாளம், குட முழவு, கொக்கரை, வீணை, புல்லாங்குழல், யாழ், பம்பை, படகம், மத்தளம், துந்துபி, முருடு ஆகிய இசைக் கருவிகள் அங்கு வாசிக்கப்பட்டன. இலக்கியங்களில் சிவபெருமான் இசைக்கும் இசைக் கருவிகளாக பேரி, மொந்தை தக்கை, வீணை, கல்லலகு, தமருகம் ஆகியவை காட்டப்பட்டிருந்தாலும், தமருகம்,உடுக்கை, வீணை, மத்தளம் ஆகியவற்றை மட்டுமே சிவன் இசைக்கும் இசைக்கருவிகளாக சிற்பிகள் படைத்திட்டனர். தமருகம் தெட்சிணாமூர்த்தியின் பின் கை கருவியாயிற்று. கங்காளமூர்த்தி சிற்பத்தில் உடுக்கை இடம் பெறலாயிற்று. விமானத்தின் தெற்கு கோட்டங்களில் சிலவும் ,சாலை நாசிகை கோட்டங்களில் சிலவும் வீணாதரர் இருப்பிடமாயிற்று. மத்தளம் இசைக்கும் சிவன் தூத்துகுடி மாவட்டம் கழுகுமலை சிவன் கோயிலில் மட்டுமே காணப்படுகின்றார்.. முற்கால சோழர் தளிகளில் சிற்பிகள் ,வீணையுடன் உள்ள விகர்பனை விரும்பிப் படைத்திட்டனர். வீணையுடன் உள்ள சிவனை ”வீணாதரர்” என்று சிறப்புப் பெயர் கொடுத்து இசைக்கருவியின் பெயரோடு சேர்த்து அழைத்தனர் மற்ற இசைக்கருவிகளுக்கு இல்லாத பெருமை இந்த வீணைக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது? என்ற வினா எழ ,விடை தேட புத்தக பக்கங்கள் புரட்டப்பட்டன. பலனில்லை. அறிஞர் பெருமகனாரிடம் (8) வினவியதில், விடை கீழ்க்கண்டவாறு கிடைத்தது. . திருப்புறம்பியம் வீணாதரர் வீணை, புல்லாங்குழல் மட்டுமே மென்மை தரும், மனதை உருக்கும் இசைக்கருவிகளாகும். மற்றவை பெரும்பாலும் அதிர்வு தரும் பேரிரைச்சல் தரும் கருவிகள் ஆகும். இவ்விரு மென்மை கருவிகளில் ஒன்று பெருமாளுக்குரியதாயிற்று; . மற்றொன்று சிவனுக்குரியதாயிற்று. திருச்சின்னம்பூண்டி வீணாதரர் வைணவக்கடவுள் கண்ணனுடன் புல்லாங்குழல் இணைக்கப்பட்டது. சிவனின் கைகளில் வீணை ஏறியது. கலைமகள் கைகளில் வீணை காட்டப்பட்டாலும், அதிகம் படைக்கப்படவில்லை இப்படி படைக்கப்பட்ட வீணாதரர் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் படைக்கப்பட்டனர். திருப்பூந்துருத்தி, குடந்தை, நார்த்தாமலை வீணாதரர்கள் அமர்ந்த நிலையிலும் திருவிசலூர் லால்குடி, துடையூர், உய்யகொண்டான் திருமலை, கீழையூர், கொடும்பாளுர், திருச்சின்னம்பூண்டி, திருப்பழனம், கரந்தை, திருப்புறம்பியம் ஆகிய இடங்களிலுள்ள சிற்பங்கள் நின்ற நிலையிலும் உள்ளவை. கட்டடக்கலை, சிற்பக்கலை மற்றும் கல்வெட்டுகள் கொண்டு பார்த்தால், திருவிசலூர், திருச்சின்னம்பூண்டி , துடையூர் ,கரந்தை, திருப்புறம்பியம், மற்றும் நார்த்தாமலை தவிர மற்ற அனைத்தும் முதலாம் ஆதித்த சோழனுடைய காலமாகக் கருதலாம். திருவிசலூர், திருச்சின்னம்பூண்டி முதல்பராந்தகனுடையதாகவும், துடையூர் கண்டராதித்தனுடையதாகவும் நார்த்தாமலை முத்தரையருடையதாகவும் கருதலாம். கரந்தை, திருப்புறம்பியம் கோயில்களில் உள்ள வீணாதரர்கள், மூலக் கோயில்களில் ஆரம்ப கட்டுமான முகமண்டபத்தில், இடைக்காலத்தில் இடைச் செருகலாக புகுத்தப்பட்டிருக்கலாம். இக்கோயில்களிலுள்ள வீணாதரர்களை ஒப்பீடு செய்கையில் குடந்தை நாகேஸ்வரர் கோயில் வீணாதரர் முதல் தரமானது ஆகும். இச்சிற்பத்தில் வெளிப்படும் ஜீவன், உடல்கூறு அமைப்பு, அளவுகள், இசையை உள்வாங்கி அதை ரசித்து வெளிப்படுத்தும் முக பாவங்கள் யாவும் இதைப் படைத்திட்ட முகம் தெரியாத, முகவரி தெரியாத சிற்பியின் கைகள் காலத்தால் கரைந்துபோனாலும் அச்சிற்பியின் உள்ளத்தில் உள்வாங்கிய உருவங்களும், உணர்ச்சிகளும் உளி வழியே சென்று அப்படியே வெளிப்படுமாறு படைத்திட்ட அவர்தம் கலைத்திறமை 1100 வருடங்கள் சென்ற பிறகும், இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. சிறிதளவு சிதைந்திருந்தாலும், இன்னும் இச் சிற்பம் நம் சிந்தையை விட்டு நீங்காமல் இன்னும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் 1000 வருடங்கள் கழித்தும், இக்கோயில் உள்ளவரை இந்த தெய்வீக கலை இங்கு உறையும் நாகேசுவரத்து நாயகருடன் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் அடிக்குறிப்புகள் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |