![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 133
![]() இதழ் 133 [ மார்ச் 2017 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
முல்லை நிலத்தில் ஆநிரைகள் மேய்க்கும் இடையர்களின் வாழ்வியலோடு இசையும் பின்னிப் பிணைந்துள்ளது. முல்லைவனத்து இயற்கைப் பொருட்களைக் கொண்டு தாமே தமக்குரிய இசைக்கருவிகளை உருவாக்கி இசைக்கின்றனர். இக்காட்சி பெரும்பாணாற்றுப்படை வரிகளின் வழியே மிக அழகாகப் படம் பிடிக்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பதிவு இதோ: "........ கூழ் ஆர் இடையன் வரிகள்: 175-182 விளக்கம்: கன்றுகளைப் பெரிதும் விரும்புகின்ற பசுத்திரளுடன் கானகத்தில் இருக்கும் பொழுதுகளில், நுண்புகை கமழும்படி தீக்கோலைக் கையால் கடைந்து தீ உண்டாக்கி அக்கொள்ளியால் மூங்கில் குழலில் துளையை உண்டாக்கி அப்புல்லாங்குழலை ஊதி இனிய குழலோசையை இசைக்கின்றான். பாலைப் பண்ணில் இன்னிசை பாடிப்பாடி அலுத்தபொழுது, அதைவிடுத்து, குமிழங்கோட்டை வளைத்துக்கட்டி மரல் கயிற்றை நரம்பாகக் கொண்டு யாழை உருவாக்கி, அவ்யாழிலே குறிஞ்சிப் பண்ணை விரலால் மீட்டுகிறான் என்பதாம். தத்தம் இசைக்கருவிகளைத் தாமே உருவாக்கி இசைத்து மகிழும் இசைக்கலைஞர்களாய் இடையர்கள் விளங்குகின்றனர். கோவலர்களின் வாழ்வில் குழலோசை என்பது இன்றியமையாததாய் விளங்குகிறது. அவர்தம் ஆநிரைகளும் குழகோசைக்கே மயங்குகின்றன. அவர்களின் எளிய இசையும் இனிமையான வாழ்க்கையும் சங்ககால வாழ்வியலின் படப்பிடிப்பாகும். இயற்கையோடும், இயற்கை சார்ந்த பொருட்களோடும் வாழ்ந்த கோவலர்தம் வாழ்க்கை சங்கத் தமிழனின் நனிசிறந்த நாகரிகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இயற்கைப் பொருட்கள் கொண்டும் இசைக்கருவிகளை அனாயாசமாக அவர்கள் உருவாக்கும் விதமும் அவர்களின் இசை நுண்ணறிவின் சிறந்த சான்றாகும்.
|
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |