![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 124
![]() இதழ் 124 [ அக்டோபர் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஆடற்கலையில் சிறந்து விளங்கினர் அன்றைய சங்ககால மகளிர். முல்லைநில மகளிரும் பல ஆடல்வகைகளை நிகழ்த்தி மகிழ்ந்தனர். அம்மள்ளனார் வரிகளால் நம் முன்னே விரியும் "தோளி" என்னும் நடனவகையின் வரலாற்றுப் பதிவு இதோ. 344. முல்லை வளமழை பொழிந்த வால்நிறக் களரி உளர்தரு தண்வளி உறுதொறும் நிலவெனத் தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின் வைரர் வால் எயிற்று ஒன்நுதல் மகளிர் கைமாண் தோளி கடுப்பப் பையென மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் - அகநானூறு: 1-6 வரிகள் விளக்கம்: தேரை நடாத்துதலிலே கைவன்மையுடைய பாகனே! வெண்ணிறம் பொருந்திய களர் நிலத்தையுடைய காட்டிலே வளமான மழையும் பொழிந்தது. வளைந்த அடிப்புறத்தினையுடைய பிடாமரத்தின் தொகுக்கப்பட்டு விளங்கிய அரும்புகள், வீசும் குளிர்ந்த காற்று தம்மால் மோதுந்தோறும், இதழ் விரிந்து நிலவொளி என்னுமாறு போல ஒளியுடன் விளங்கிக் கொண்டுமிருக்கும், கூரிய அழகான வெண்மையான பற்களையும் ஒளிதங்கிய நெற்றினையும் உடைய மகளிரின் ஒழுங்கு மாட்சிமைப்பட்டு விளங்கும் "தோளி" என்னும் ஆடலைப் போல, மெல்லின மயிலினக்கள் தோள்பெயர்த்து ஆடலுமாயின. மரங்கள் செறிந்த காட்டின் இயல்பும் அதுவே என்பதாம். இப்பாடலில் இடம்பெறும் "தோளி" என்பது தோள்களை இயக்கி மகளிர் ஆடுகின்ற குழு ஆடல்வகையினைக் குறிப்பது. திருவாசகத்துள் வரும் "திருத்தோணாக்கம்" என்பதும், இத்தகையவொரு ஆடல் மரபினைக் கூறும். மயிலின் அழகிய ஆடலுக்கு இவ்வாடலை உவமை கூறிய நயமே நயம். இவ்வாடல் குழு ஆடல் வகையைச் சேர்ந்தது என்பது பாடல்வழித் தேற்றம். இவ்வாடல் பற்றிய குறிப்பு இடம்பெறும் சங்கப் பாடலும் இதுவே! முல்லைநில மக்களின் வாழ்க்கையின் வரலாற்றுப் பதிவும் இதுவே! |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |