![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 120
![]() இதழ் 120 [ ஜுன் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஐந்திணை சார்ந்த இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மேற்கொண்டிருந்த சங்க காலத் தமிழரின் உணவியலும் அவரவர் திணை சார்ந்து இயற்கை வளத்தோடும் நலத்தோடும் ஒருமித்த வழக்காறாய் அமைந்து சிறப்புற்றிருந்தது. உணவியல் கலை பற்றிக் குறிப்பிடும் மடை நூல்களும் அக்காலத்தில் வழக்கில் இருந்துள்ளமையை ஆற்றுப்படை நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை சுட்டுகிறது. இச்சுவையான இலக்கியச் சுட்டலில் மகாபாரதச் செய்திகளையும் பஞ்ச பாண்டவர்களுள் இருவரான அர்ஜூன ன் மற்றும் வீமன் பற்றிய செய்திகளையும்கூட அறிய முடிவது கூடுதல் சிறப்பு.
![]() அப்பாடல் வரிகள் இதோ.. ‘கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப் பூ விரி கச்சை புகழோன் தன்முன் பனி வரை மார்பன் பயந்த நுண்பொருள் பனுவலின் வழாஅ பல்வேறு அடிசிலை.. - வரிகள் 238-241 கா எரி ஊட்டிய கணை கவர் தூணிபூ விரி கச்சை புகழோன் - காண்டவ வனத்தை நெருப்புண்ணும்படி எய்த கணையை உள்ளடக்கின ஆவநாழிகையினையும் (அம்பறாத் துணியையும்) பூத்தொழில் பரந்த கச்சையினையும் (அதாவது இடைக்கச்சினையும்) உடைய புகழ் மிக்கவனின் (அருச்சுனன்) (புகழோன்) தன்முன் பனிவரை மார்பன் பயந்த- (அருச்சுனனின்) தமையனாகிய இமய மலையையொத்த மார்பை உடையவனான வீமசேனன் கண்ட நுண் பொருள் பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்- கூரியபொருளையுடைய மடைநூலில் காணப்படும் நெறியிலிருந்து தப்பாத பல வேறுபாட்டையுடைய அடிசிலை.. அக்காலத்தில் பல்வேறு சமையல் நூல்கள் (மடை நூல்கள் அல்லது பாகசாத்திர நூல்கள்) புழக்கத்தில் இருந்ததையும் அவற்றுள் ஒன்றாக சமையற்கலையில் சிறந்த கலைஞனான வீமன் யாத்த நூலும் இருந்ததையும் இப்பாடல் வரிகள் ஒருங்கே குறிப்பிடுகின்றன. ‘நள பாகம்’ ‘பீம பாகம்’ என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதை சிறுபாணாற்றுப்படையும் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |