![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 110
![]() இதழ் 110 [ ஆகஸ்ட் 2014 ] பத்தாம் ஆண்டு நிறைவு மலர் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தேடலில் தெறித்தவை
பொதுக்காலம் 1410 ஆகஸ்டு 17 ஞாயிறன்று பதிவாகியுள்ள திருவரங்கக் கல்வெட்டொன்று பார்வைக்குக் கிடைத்தது (24: 305). மன்னர் பெயரற்றிருக்கும் இந்தக் கல்வெட்டின் தகவல் இதுவரை கேள்விப்படாததாக உள்ளது. காஷ்மீரத்தைச் சேர்ந்த சங்கமதேவரின் மகன் எல்லயருக்கு, ‘திருயஞ்ஞோஉபவீதக் காணியாட்சியாக’ அரங்கன் (இறைவன்) அளித்த கொடைகள் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.
1. திருவரங்கம் தெற்கு மாடவீதியின் கிழக்குத் துண்டத்தின் வடபகுதியில் எடுத்தகையழகிய நம்பியார் மனைக்குக் கிழக்கிலும் சுந்தரத்தோளுடையார் நம்பியார் மனைக்கு மேற்கிலும் அமைந்திருந்த இரண்டு கோல் அளவுள்ள மனை. 2. துறையூரில் இரு பூ (இரண்டு போகம்) விளையும் நிலம் இரண்டு வேலி - இறையிலியாக. 3. நாள் ஒன்றுக்குக் கோயிலில் பெறுவன (பிரசாதப் பேறு) அ. பிரசாதம் 2 நாழி ஆ. திருக்கண்ணாமடை உரியளவு இ. கால் அப்பம் ஈ. ஆழாக்குப் பால் முப்புரிநூலுக்குக் கூட (அது அணியும் விழாவன்று தரப்பட்டிருக்குமோ?) காணியாட்சி தரப்பட்ட தகவல், அதுவும், அக்காணியாட்சி உரிமைகள் எம்பெருமான் அரங்கனாலேயே அளிக்கப்பட்டதாகக் (‘பெருமாள் அருளிச் சொல்ப்படிக்கு’) கல்வெட்டுக் கண் காட்டுவது புதிய தெறிப்பே!this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |