![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 121
![]() இதழ் 121 [ ஜுலை 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தமிழ்க் கடவுள் முருகனுக்குப் பல விழாக்கள் எடுத்துச் சிறப்பித்துள்ளனர் பண்டைய தமிழர்கள். குன்றுகள் எல்லாம் அவனுக்கே உரிமைப்பட்டதாய் விளங்கும் தமிழ் மண்ணில் வேலனுக்கென்றே அமைந்த விழாக்கள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. அவ்விழாக்களுள் பரங்குன்றத்து விழாவும் ஒன்றாகும். தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணில் சீர்பெற்று விளங்கும் பரங்குன்றத்தில் முருகனுக்கு வெகு சிறப்பாக விழா தொடர்ந்து நடைபெற்றதை அகம் 400ல் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பதிவு செய்துள்ளார்.
![]() நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து.. - அகம் 400;149;13-17 விளக்கம்: ‘நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது கொடி அசையும் தெருவினையுடைய கூடலில் (மதுரையில்) மேம்பாலுள்ள பல பொறிகளையுடைய வெல்லும் மயிற்கொடியினை உயர்த்த இடையறாத விழாவினையுடைய முருகனது திருப்பரங்குன்றத்தே வண்டு வீழ நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்..’ என்பதாகும். சங்க காலம் முதல் இன்றுவரை திருப்பரங்குன்றம் முருகனுக்குப் பல விழாக்கள் கண்ட திருத்தலமாகும். குன்றுதோறும் குடியிருக்கும் குமரனுக்குத் தமிழர் செய்த சீரீய சிறப்பை இப்பாடல் சுட்டுகிறது. தொல்சிறப்பும் பழம்பெருமையும் தொடரும் நற்பாரம்பரியமும் கொண்ட பரங்குன்றம் பற்றிய சிறப்புச் செய்தி அதுவே. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |